Published : 14 Nov 2021 03:07 AM
Last Updated : 14 Nov 2021 03:07 AM

பாம்பன் தூக்குப் பாலத்தில் மோதி கடலில் மூழ்கிய விசைப்படகு :

மண்டபத்தைச் சேர்ந்த அம்ஜத்கான் என்பவரது விசைப் படகில் 4 மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று மண்டபம் வடக்கு கடல் நோக்கி நேற்று மீன்பிடிக்கச் சென்றனர்.

விசைப்படகு ரயில் தூக்குப் பாலத்தை கடந்து செல்லும்போது கடல் நீரின் மட்டம் அதிகரித்ததால் படகின் மேற்கூரை பாலத்தின் மீது மோதி படகு பலத்த சேதமடைந்தது. தொடர்ந்து மீண்டும் கரைக்கு கொண்டு வர முயன்ற போது படகில் கடல் நீர் புகுந்து நடுக்கடலில் மூழ்கியது. விசைப்படகில் இருந்த யாசர் அராபத், முனியசாமி, கோவிந்தன், சசி ஆகிய 4 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர். அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். விபத்து குறித்து மெரைன் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x