Published : 13 Nov 2021 03:08 AM
Last Updated : 13 Nov 2021 03:08 AM

கோவையில் நாளை மெகா கரோனா தடுப்பூசி முகாம் :

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘கோவை மாவட்டத்தில் இதுவரை 7 முறை மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, நாளை (நவ.14) எட்டாவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்படும். இதன்மூலம் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த காத்திருப்போரும் தங்களது வீட்டுக்கு அருகில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x