Published : 13 Nov 2021 03:08 AM
Last Updated : 13 Nov 2021 03:08 AM

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைப்பு :

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர் திறப்பு விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. அணையின் மொத்த உயரமான 120 அடியில் 119 அடிக்கு நீர்மட்டம் உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி நீர்வரத்தைப் பொறுத்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 19,146 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 14,812 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து நேற்று முன்தினம் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் திறப்பு, பின்னர் 14 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று பகல் 12 மணியில் இருந்து நீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 150 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 91.88 டிஎம்சி-யாக உள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று காலை அளவீட்டின்போது, விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடி என்ற அளவில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x