Published : 13 Nov 2021 03:08 AM
Last Updated : 13 Nov 2021 03:08 AM

புதுச்சேரியில் புதிதாக 37 பேருக்கு கரோனா :

புதுச்சேரியில் 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்டுள்ள தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 1,863 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 21, காரைக்காலில் 11, ஏனாமில் 1, மாஹேவில் 4 என மொத்தம் 37 பேருக்கு (1.50 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 82 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 189 பேரும் என மொத்தமாக 271 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக உயிரிழப்பு ஏதுமில்லை. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,863 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 235 (98.34 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 11 லட்சத்து 47 ஆயிரத்து 178 பேருக்கு தடுப்பூசி (இரண்டாவது தவணை உள்பட) செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x