Published : 12 Nov 2021 03:15 AM
Last Updated : 12 Nov 2021 03:15 AM

வளர்ப்பு நாயை துன்புறுத்திய விவகாரத்தில் - தங்கையை தாக்கிய அண்ணன் கைது :

கோவை பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த நவீன்குமாரின் மனைவி மணிமேகலை (32). இவரது சகோதரர் சதீஷ்குமார் (36). இவர்கள் குடும்பத்துடன் அருகருகேயுள்ள வீடுகளில் வசிக்கின்றனர். இந்நிலையில், சதீஷ்குமார் தனது வீட்டில் வளர்த்துவரும் நாயை தினசரி அடித்து துன்புறுத்திவந்தார். இதுதொடர்பான வீடியோ பதிவுகள், விலங்குகள் நல வாரியத்துக்கு சென்றுள்ளன. அவர்கள் அளித்தபுகாரின்பேரில், போத்தனூர் போலீஸார் சதீஷ்குமாரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த சதீஷ்குமார், தங்கையின் வீட்டிலிருந்து தான் வீடியோ பதிவுகள் சென்றிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து, கடந்த 10-ம் தேதி அவர்களது வீட்டுக்குள் புகுந்து மணிமேகலை மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அவரைத் தடுக்க சென்ற மணிமேகலையின் கணவர் நவீன்குமார் மீது குக்கரை எடுத்து தாக்கியுள்ளார். இதில் நவீன்குமாருக்கு காலில்எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மணிமேகலை அளித்த புகாரின் பேரில், 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x