Published : 12 Nov 2021 03:15 AM
Last Updated : 12 Nov 2021 03:15 AM

திருப்பூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் :

திருப்பூர்

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்லடம் சாலையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.

திருப்பூர் பல்லடம் சாலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நேற்று காலை தொடங்கினர். சாலையில் கடைகளின் முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பதாகைகள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தினர். ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது வியாபாரிகள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம் சாலையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புஅகற்றும் பணி பல்லடம் சாலையின்இருமருங்கிலும் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x