Published : 12 Nov 2021 03:17 AM
Last Updated : 12 Nov 2021 03:17 AM

சுவாமிமலையில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் :

கும்பகோணம்

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, சுப்பிரமணியசுவாமி வள்ளி-தெய்வாணையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர், கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மங்களவாத்தியம் முழங்க விழா கொடியேற்றம் நடைபெற்றது.

இதையடுத்து, நவ.12,13 ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும், 15-ம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 19-ம் தேதி திருக்கார்த்திகை அன்று இரவு 8 மணிக்கு தீபக்காட்சியும், அதைத் தொடர்ந்து சுவாமி புறப்பாடும் உட்பிரகாரத்தில் நடைபெறும்.

அதன்பின்னர், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x