Published : 12 Nov 2021 03:17 AM
Last Updated : 12 Nov 2021 03:17 AM

கோட்டாட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை :

எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை நாலாட்டின்புதூர் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் கோட்டா ட்சியர் சங்கரநாராயணனிடம் வழங்கிய மனு விவரம்: நாலாட்டின்புதூர் கிராமத்தில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். எங்களுக்குள் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளை நாங்களே பேசி சமாதானம் செய்து கொள்வோம். ஆனால், நாலாட்டின்புதூர் காவல் உதவி ஆய்வாளர், இங்கு நடக்கும் சிறிய சண்டைகள் மற்றும் வாக்குவாதத்தை மிகைப்படுத்தி, தீண்டாமை வழக்குகளை பதிவு செய்ய தூண்டி விடுகிறார்.

எனவே, உதவி ஆய்வாளரை இடமாற்றம் செய்ய வேண்டும். என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x