Published : 09 Nov 2021 03:10 AM
Last Updated : 09 Nov 2021 03:10 AM

சோழவந்தான் அருகே - ரவுடி கொலை வழக்கில் நண்பர் சிக்கினார் :

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகிலுள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ரோஷன்குமார் (எ) கோட் டைச்சாமி(21). கேரளாவில் பணிபுரிந்த இவர், தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 4-ம் தேதி தனது நண்பரான நிலக்கோட்டை ராமராஜபுரத்தைச் சேர்ந்த பாப்பு என்பவருடன் அருகிலுள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கோட்டைச்சாமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், வீடு திரும்பிய கோட் டைச்சாமி கடந்த 6-ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது தோட்டத்து கிணற்றில் அவரது உடல் கிடந்தது தெரியவந்தது.

சோழவந்தான் போலீஸார் உடலை மீட்டபோது, அவரது உடலில் கல் கட்டப்பட்டு இருந்ததும், அவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதும் தெரி யவந்தது. போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் பாப்புவை பிடித்து விசாரித்து வருகின்றனர். ரவுடிப் பட்டி யலில் இடம் பெற்றிருந்த கோட்டைச்சாமி மீது ஏற்கெனவே கொலை, கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும், பாப்பு மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளும் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x