Published : 09 Nov 2021 03:10 AM
Last Updated : 09 Nov 2021 03:10 AM

கொடைக்கானல்-அடுக்கம் மலைச்சாலையில் பயணிக்க தடை :

தொடர்மழை எதிரொலியாக, கொடைக்கானல்- அடுக்கம் மலைச் சாலையில் பயணிகள் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லும் வழியில் அடுக்கம் மலைச்சாலையில் பயணித்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மதுரை தேனூரைச் சேர்ந்த 3 பேர் இறந்தனர். அதிக மேகமூட்டத்தால் சாலை தெரியாததே விபத்துக்கு காரணமாக அமைந்தது.

தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் சாலையின் பல இடங்களில் மழை நீர் அருவிபோல் கொட்டுகிறது. மண் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்தச் சாலையில் வாகனங்களில் பயணிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கொடைக்கானல் மலைப் பகுதியில் கனமழை காரணமாக கொடைக்கானல்-அடுக்கம்- பெரியகுளம் மலைச்சாலையில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் இந்தச் சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x