Published : 03 Nov 2021 03:09 AM
Last Updated : 03 Nov 2021 03:09 AM

மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் 6-ம் தேதிக்கு தள்ளி வைப்பு :

புதுச்சேரி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5-ம் தேதி நடைபெற இருந்த முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 6-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அக்கல்லூரியின் முதல்வர் சசிகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட சென்டாக் கவுன்சலிங் துறை வாரியாக கடந்த மாதம் 26-ம்தேதி முதல் தொடங்கி நடை பெற்று வருகிறது.

இது சம்பந்தமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு வரும் 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற இருந்த நடப்பு ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர் விடுமுறை காரணமாக மறுநாள் 6-ம் தேதி (சனிக்கிழமை)அன்று தள்ளி வைக்கப்பட் டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தை பார்க்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x