Published : 03 Nov 2021 03:09 AM
Last Updated : 03 Nov 2021 03:09 AM

புதுச்சேரியில் வரும் 5, 6-ல் பள்ளிகளுக்கு விடுமுறை :

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் வரும் 5,6-ம் தேதிகள் விடுமுறை விடப்படுவதாக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. வரும் 8-ம் தேதி முதல் பள்ளிகள் முழுமையாக இயங்க உள்ளன.

தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக நாளை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு ஷாப்பிங், சொந்த ஊர் செல்வது மக்கள் உள்ள நிலையில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 5,6-ம்தேதிகளில் அரசு விடுமுறையை கல்வித் துறை முறைப்படி நேற்று அறிவித்துள்ளது. வரும் 8-ம் தேதி முதல் கல்வித்துறை உத்தரவுப்படி பள்ளிகள் அரை நாள் செயல்படத் தொடங்கும்.

ஏற்கெனவே நவம்பர் 1-ம் தேதியன்று புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் அரசு விடுமுறை விடப்பட்டது. நேற்று கல்லறைத் திருநாள் என்பதால் விடுமுறை விடப்பட்டது.

மேலும், தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று (நவ. 3) புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி, காரைக்காலில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு வரும் 8-ம் தேதி முதலே பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற உள்ளன.

தொடர் மழை, பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்து, அனைத்து பள்ளிகளும் 1 முதல் 12-ம் வகுப்பு கள் வரை அன்று முதல் இயங்க உள்ளன. இதற்காக தொடக்க, நடுநிலைப் பள்ளி நிர்வாகங்கள் ஆயத்தமாகி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x