Published : 03 Nov 2021 03:10 AM
Last Updated : 03 Nov 2021 03:10 AM

காரைக்கால் பாமக நிர்வாகி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது :

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அக்.22-ம் தேதி பாமக மாவட்டச் செயலாளர் க.தேவமணி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த மணிமாறன்(28), ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி(59), மயிலாடுதுறை மாவட்டம் இலுப்பூர் ராமச்சந்திரன்(54) உட்பட 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கூலிப்படையைச் சேர்ந்த மயிலாடுதுறை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கீர்த்திகரன்(21) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலையில் தொடர்புடைய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x