Published : 03 Nov 2021 03:10 AM
Last Updated : 03 Nov 2021 03:10 AM

10 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி : நாகை எம்எல்ஏ தொடங்கி வைத்தார் :

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூரில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாகை எம்எல்ஏ முகம்மது ஷா நவாஸ் பனை விதைகளை நட்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர், திருச்செங்காட்டாங்குடி ஊராட்சியில் சேதமடைந்த வீரமுட்டி வாய்க்கால் பாலத்தை ஆய்வு செய்தார். திட்டச்சேரி அரசு தொடக்கப் பள்ளியில் இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது கொந்தகையில் உள்ள தனியார் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அபிநயா அருண்குமார், சுல்தான் ஆரிப், ஊராட்சித் தலைவர்கள் வள்ளி கலியமூர்த்தி, மோகன், திட்டச்சேரி திமுக நகரச் செயலாளர் முகமது சுல்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x