Published : 25 Oct 2021 03:09 AM
Last Updated : 25 Oct 2021 03:09 AM
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே திருமழிசையைச் சேர்ந்த குருமூர்த்தி மகன் ராஜேஷ்குமார்(23). இவர் சென்னையில் வழக்கறிஞராக உள்ளார். நண்பர்களைப் பார்க்க சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். அப்போது அல்லிநகரம் கோயில் தெப்பக்குளத்தில் குளித்தார்.
தண்ணீரில் மூழ்கியவரை அருகில் இருந்தோர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT