Published : 19 Oct 2021 03:10 AM
Last Updated : 19 Oct 2021 03:10 AM

மதுபானத்தால் விளையும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி :

பாளையங்கோட்டையில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் விளையும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் விளையும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் டி.பி. சுரேஷ்குமார் கருத்துரை வழங்கினார். 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து அவர் தொடங்கி வைத்தார்.

கூடுதல் காவல் துணை ஆணையர் சங்கர், உதவி ஆணையர்கள் பாலச்சந்திரன், விவேகானந்தன், கல்லூரி தாளாளர் சவுந்திரபாண்டியன், கல்லூரி முதல்வர் உஷா காட்வின், மாநகர மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, காவல் ஆய்வாளர் ஆன்டனி ஜெகதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x