Published : 11 Oct 2021 03:15 AM
Last Updated : 11 Oct 2021 03:15 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தலில் - வேலூரில் 81.07%, ராணிப்பேட்டையில் 82.52%, திருப்பத்தூரில் 77.85% வாக்குகள் பதிவாகின :

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மாவட்டம் வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வெளியாகியுள்ளன.

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல் அணைக்கட்டு, கணியம்பாடி மற்றும் வேலூர் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்றது. இதில், வேலூர் ஒன்றியத்தில் 57 ஆயிரத்து 612 வாக்காளர்கள் உள்ளனர்.

அதில், 47 ஆயிரத்து 625 பேர் வாக்களித்துள்ளனர். அணைக் கட்டு ஒன்றியத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 029 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 1 லட்சத்து 7 ஆயிரத்து 424 பேர் வாக்களித் துள்ளனர். கணியம்பாடி ஒன்றி யத்தில் 64 ஆயிரத்து 654 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 53 ஆயிரத்து 528 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

3 ஒன்றியங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 295 வாக்காளர்களில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 577 பேர் வாக்களித்துள்ளனர். அதன்படி, 2-ம் கட்ட தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் 81.07 சதவீதம் வாக்குப்பதிவு நடந் துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் என 4 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று முன்தினம் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில், அரக்கோணம் ஒன்றியத்தில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 935 வாக்காளர்களில் 95 ஆயிரத்து 717 பேர் வாக்களித்துள்ளனர். நெமிலி ஒன்றியத்தில் 99 ஆயிரத்து 815 வாக்காளர்களில் 84 ஆயிரத்து 678 பேர் வாக்களித்துள்ளனர். காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 51 ஆயிரத்து 621 வாக்காளர்களில் 43 ஆயிரத்து 777 பேர் வாக்களித்துள்ளனர். சோளிங்கர் ஒன்றியத்தில் 98,007 ஆயிரத்து 802 வாக்காளர்கள் என மொத்தம் 4 ஒன்றியங்களில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 378 வாக்காளர்களில், 3 லட்சத்து 39 ஆயிரத்து 974 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தலில் 82.52 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், மாதனூர் ஆகிய 2 ஒன்றியங்களில் 2-ம் கட்ட தேர்தலில் ஆலங்காயம் ஒன்றியத்தில் 94 ஆயிரத்து 927 வாக்காளர்களில், 75 ஆயிரத்து 427 பேர் வாக்களித்துள்ளனர். மாதனூர் ஒன்றியத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 188 வாக்காளர்களில், 94 ஆயிரத்து 365 பேர் என 2 ஒன்றியங்களில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 115 வாக்காளர்களில், 1 லட்சத்து 69 ஆயிரத்து 792 பேர் வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 77.85 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x