Published : 01 Sep 2021 03:19 AM
Last Updated : 01 Sep 2021 03:19 AM

ஈய கட்டிகளை திருடிய 3 பேர் கைது :

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கோமுட்டி தெருவைச் சேர்ந்தவர் சுதர்சன் (29). லாரி உரிமையாளர். ஓசூரில் உள்ளதனியார் பேட்டரி நிறுவனத்துக்காக சென்னையில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 44 ஈயக்கட்டிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் 2 லாரிகள் புறப்பட்டன. லாரியை, சுகுமார் மற்றும் மாரி ஆகியோர் ஓட்டி வந்தனர்.

இந்த லாரிகளை ராணிப் பேட்டை அருகேயுள்ள வி.சி.மோட்டூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிறுத்திவிட்டு ஓட்டுநர்கள் உறங்கச் சென்றனர். நேற்று காலை பார்த்தபோது ஈய கட்டிகள் திருடுபோனது தெரியவந்தது. இது தொடர்பாக லாரி உரிமயைாளர் சுதர்சன் அளித்த புகாரின் பேரில் வாலாஜா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஈய கட்டிகள் திருடுபோனது தொடர்பாக, வாலாஜா பகுதியைச் சேர்ந்த முபாரக் (24), தேவராஜ் (31), ஷாஜகான் (29) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்ததுடன், 40 ஈயக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x