Published : 25 Feb 2021 03:17 AM
Last Updated : 25 Feb 2021 03:17 AM

அதிமுக செய்தித்தொடர்பு செயலாளராக வைகைச்செல்வன் நியமனம்

சென்னை

அதிமுக செய்தித்தொடர்பு செயலாளராக வைகைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, அதிமுக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கட்சியினர் மத்தியில் உள்ள அதிருப்திகளைக் களையும் வகையில், அமமுகவில் இருந்து வந்தபல்வேறு நிர்வாகிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், செய்தித்தொடர்பாளருமான வைகைச்செல்வனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அதிமுக செய்தித்தொடர்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார். கட்சியினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x