Published : 12 Dec 2020 03:17 AM
Last Updated : 12 Dec 2020 03:17 AM

சில்லரை விற்பனையிலும் ஈடுபடுவதாக மொத்த மீன் வியாபாரிகள் மீது புகார்

திருப்பூர் மீன் சந்தையில் மொத்தவிற்பனை செய்யும் வியாபாரிகள் சில்லரை விற்பனையிலும் ஈடுபடுவதால், வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் நலச் சங்கத்தினர், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் நேற்று அளித்த மனுவில், "திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மொத்த விற்பனை மீன் சந்தை உள்ளது. இங்கிருந்து சில்லரை வியாபாரிகள் மீன்களை பெற்றுக்கொண்டு, திருப்பூர் மாநகர் மட்டுமின்றி மாநகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மீன் சந்தையில்சில்லரை வியாபாரமும் நடைபெறுகிறது. இதனால் 5000-க்கும் மேற்பட்ட சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். இது குறித்து மீன் மொத்த சந்தை உரிமையாளர்களிடம் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய தீர்வு காண வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x