Published : 09 Nov 2020 03:12 AM
Last Updated : 09 Nov 2020 03:12 AM

மதுரை- கன்னியாகுமரி நான்கு வழிச் சாலை சுங்கச் சாவடிகளில் ரூ.1,079 கோடி வரி வசூல்

திருநெல்வேலி

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர் வலர் பாண்டியராஜா மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை சுங்கச் சாவடிகள் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டிருந்தார். அதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளித்துள்ள பதில்:

மதுரை முதல் கன்னியாகுமரி வரை கப்பலூர், எட்டுர்வட்டம் (சாத்தூர்), சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை கப்பலூர்- ரூ.256.71 கோடி, எட்டுர்வட்டம்- ரூ.271.05 கோடி, சாலைப்புதூர்- ரூ.274.58 கோடி, நாங்குநேரி- ரூ.276.75 கோடி என்று, 4 சுங்கச்சாவடிகளிலும் மொத்தம் ரூ.1,079 கோடி சுங்கவரி வசூலிக்கப்பட்டுள்ளது.

நான்குவழிச் சாலை அமைப்பதற்கான முதலீட்டுத் தொகை மற்றும் பராமரிப்பு செலவுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்யும் வரை சுங் கச்சாவடிகளில் வசூல் தொட ரும். தற்போதைக்கு இந்த சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை.

நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதில் இருந்து தற்போதுவரை மதுரை முதல் விருதுநகர் வரை மட்டுமே மீண்டும் புதிதாக சாலை 2018-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமைக்கப்பட்டது.

விருதுநகர் முதல் கன்னியா குமரி வரை 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய சாலை அமைக்கப்படவில்லை.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள் ளது.

மேலும், சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விருதுநகரில் இருந்து சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, பணகுடி வழியாக கன்னியாகுமரி வரை உள்ள நான்கு வழிச்சாலை பயன்பாட் டுக்கு உகந்ததாக இல்லை. சாலை சரியாக பராமரிக்கப்படாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படு கின்றன என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x