Published : 02 Nov 2020 03:14 AM
Last Updated : 02 Nov 2020 03:14 AM

வேளாண் சட்டங்களை எதிர்த்து நவ.5-ல் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு

மத்திய அரசின் வேளாண்சட்டங்களை எதிர்த்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு வரும் 5-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும் அழித்தொழிக் கும் வகையில் மத்திய பாஜக அரசு வேளாண் விரோத சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக் கும் மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த மசோதா 2020-ஐ கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் நாடு முழுவதும் நவ. 5-ம் தேதிசாலைமறியல் போராட்டத்துக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நவ. 5-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு வின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முழுமையாக பங் கேற்கும். விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக நடக்கவுள்ள இந்தஆர்ப்பாட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும்.

இவ்வாறு சண்முகம் கூறி யுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x