Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

கல்குவாரி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு

உத்திரமேரூர் அருகே நேற்று கல்குவாரி பள்ளத்தில் லாரிகவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுதாமூர் கிராமத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் கிளக்காடி கிராமத்தைச் சேர்ந்த கோதண்டன்(40) என்பவர்லாரி ஓட்டுநராக செயல்பட்டு வந்தார்.

இவர் கல்குவாரி பள்ளத்தில் இருந்து கற்கலை ஏற்றிக் கொண்டு லாரியை ஓட்டி வந்தார். அப்போது லாரி நிலை தடுமாறி அந்தப் பள்ளத்திலேயே கவிழ்ந்தது.

பள்ளத்தில் ஆழம் அதிகம் இருந்தால் ஓட்டுநர் கோதண்டம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலவாக்கம் போலீஸார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x