Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தலைமைக் காவலர் கைது :

திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் சே.கருணாநிதி(45). இவர், தற்போது அயல் பணியில் திருச்சி மாநகர ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் பிற்பகலில் எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலையத்துக்கு அருகேயுள்ள சுரங்கப் பாதையையொட்டிய பகுதியில் மனநலம் குன்றிய 25 வயது பெண்ணிடம் கருணாநிதி தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்து, அந்தப் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிப்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமைக் காவலர் கருணாநிதியைக் கைது செய்து, நேற்று லால்குடி கிளைச் சிறையில் அடைத்தனர்.

கூலித்தொழிலாளி கைது

அரியலூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கடல்மணி( 44). கூலித்தொழிலாளியான இவர், அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அரியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், நேற்று முன்தினம் இரவு கடல்மணியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x