Published : 02 Dec 2021 03:07 AM
Last Updated : 02 Dec 2021 03:07 AM

காட்டுப்பள்ளி துறைமுக எல்லையில் நுழைந்த 4 இலங்கை மீனவர்கள் கைது :

அவ்விசாரணையில், இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த முகமது ரிஸ்கான்(21), முகமது காலீம்(50), முகமது ஹைய்தர்(42), முகமது ரியால்(19) ஆகிய 4 மீனவர்கள் எவ்வித அரசு ஆணையும் இன்றி சட்டவிரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்து, காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தில் நுழைந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, பிடிப்பட்ட 4 பேரை, விசைப்படகுடன் காட்டூர் போலீஸாரிடம் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காட்டூர் போலீஸார், அவர்கள் நால்வரையும் நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x