Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM
திருப்பூர்: திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் மதுபோதையில் ஒருவர், 8 வயது சிறுமியை வைத்துக்கொண்டு பிச்சை எடுத்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஜனா, விஜயகண்ணன், உதயராஜ் ஆகியோர் குழந்தைகள் நலக்குழுவுக்கு புகார் அளித்தனர். இக்குழுவினர் அளித்த தகவலின்பேரில், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸார் அங்கு சென்றனர். தொடர்புடைய நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மதுபோதையில், பெற்ற மகளையே வைத்து பிச்சை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமி, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்படார். போதை நபரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் அளித்த ஆட்டோ ஓட்டுநர்களை குழந்தைகள் நலக்குழுவினரும், பொதுமக்களும் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT