Published : 18 Nov 2021 03:08 AM
Last Updated : 18 Nov 2021 03:08 AM
நேற்று காலை திமுக சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திமுக பிரமுகர் கேவிஎஸ் சீனிவாசன், பேரூர் கழக செயலாளர் ஜேகேஎஸ் பாபு, ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பாய், தலையணை, அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை, கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான செங்குட்டுவன் வழங்கி, குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து கொண்டிருக்கும் போதே, ஜோதிபுரத்தில் வசிக்கும் முருகேசன் (60) என்பவரது வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் உள்ளவர்கள் ஆய்வு நடந்த இடத்தில் இருந்ததால் அனைவரும் உயிர் தப்பினர். இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்ட முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தினரிடம் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுதல் கூறி, ரூ.1 லட்சம் நிவாரணத்தை உடனே வழங்கினார். முன்னதாக 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT