Published : 31 Oct 2021 03:11 AM
Last Updated : 31 Oct 2021 03:11 AM
ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து நீர் திறப்பு மற்றும் காவிரி வனப்பகுதியில் பெய்யும் மழையை பொருத்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து ஏற்ற இறக்கத்தில் இருந்துவருகிறது. ஒகேனக்கல்லில் கடந்த 28-ம் தேதி மாலை நீர்வரத்து விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று முன்தினம் மாலை 18 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாகவும், மாலையில் 14 ஆயிரம் கனஅடியாகவும் குறைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT