Published : 27 Oct 2021 03:09 AM
Last Updated : 27 Oct 2021 03:09 AM

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி - மாற்று திறனாளிகள் திரண்டு ஆர்ப்பாட்டம் :

தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்டச் செயலர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தார்.

அரசு, தனியார் நிறுவனங்களில் 5 சதவீத மாற்றுத் திறனாளிக ளுக்கு சம வாய்ப்பு, மாத உதவித்தொகையை ரூ.5 ஆயிர மாக உயர்த்த வேண்டும், அடையாளச் சான்றுக்காக அலைக்கழிக்கக் கூடாது. அருப்புக் கோட்டை, சாத்தூர், சிவகாசி கோட்டாட்சியர்கள் மாதாந்திர குறைதீர்க் கூட்டம் நடத்தி அன்றே அடையாளச்சான்று வழங்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் சங்க செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தலைவர் பி.கல்யாணசுந்தரம், பொருளாளர் என்.ஹரிஹரசுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x