Published : 26 Oct 2021 03:07 AM
Last Updated : 26 Oct 2021 03:07 AM

திண்டுக்கல்லில் ஆவினை கண்டித்து : பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் :

ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொருளாளர் சங்கர் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கச் செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளரும், அகில இந்திய விவசாயிகள் சங்க மத்தியக்குழு உறுப்பினருமான ஆர்.சச்சிதானந்தம் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

ஆவின் விற்பனை முகவர் நியமனத்தில் ஒரே குடும்பத்தினருக்கு மாவட்டம் முழுவதும் பால் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். பால் கொள்முதலுக்கான தொகையை ஆவின் நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x