Published : 23 Oct 2021 03:08 AM
Last Updated : 23 Oct 2021 03:08 AM

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் - பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் :

திண்டுக்கல்

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி யில் பலத்த போலீஸ் பாது காப்புடன் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. துணைத் தலைவராக அர்ஜுனன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மொத்தம் 15 உறுப்பினர்களில் காலியாக இருந்த 2 உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து துணைத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் இரு தரப்பினரிடையே கடும் போட்டி நிலவியது. இதனால் திண்டுக்கல் எஸ்.பி வி.ஆர்.சீனிவாசன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 6-வது வார்டு உறுப்பினர் அர்ஜுனன், 15-வது வார்டு உறுப்பினர் கணேசன் ஆகியோர் துணைத் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இதனிடையே தேர்தலை தள்ளி வைக்குமாறு கணேசன் தேர்தல் அலுவலரிடம் கோரினார். இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து கணேசனின் ஆதரவு உறுப்பினர்கள் 6 பேர் தேர்தலை புறக்கணித்து வெளியேறினர்.

இதையடுத்து ஊராட்சித் தலைவர் மற்றும் 9 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் அனைத்து வாக்குகளையும் அர்ஜுனன் பெற்றதையடுத்து துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் மலரவன் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x