திருவாரூரில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

திருவாரூரில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

Published on

திருவாரூரில் உள்ள தொழிலாளர் நலத் துறை அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்புடைய தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர், சிமென்ட், மணல், ஜல்லி, செங்கல், கம்பி ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in