Published : 06 Oct 2021 03:14 AM
Last Updated : 06 Oct 2021 03:14 AM

காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் :

உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் காங்கிரஸ்- திமுக கூட்டணி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோ கரன் தலைமை வகித்தார். திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காசிவிஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ லெட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனி எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்பி ராமசுப்பு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சங்கரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x