Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM
புதுச்சேரி டி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராமன் என்கிற முருகன் (51), விவசாயி. இவர் நேற்று மாலை தனது நிலத்தில் விவசாய வேலைசெய்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர், தோட்டத்திலேயே அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்த தவளக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், முருகனுக்கும் அவரது வீட்டருகே வசிப்பவர்களுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருவது தெரியவந்தது.
இதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
மேலும் ஒருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT