Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM
கரூர்: கரூர் காந்தி கிராமம் முல்லை நகரைச் சேர்ந்த நவீன் என்பவரின் மனைவிக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இவர்களைப் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு தனது சகோதரருடன் மருத்துவமனைக்குச் சென்ற நவீனை, பாதுகாப்பு பணியிலிருந்த ஒப்பந்தப் பணியாளர் ஜெயலட்சுமி(47) தடுத்ததால், அவரை நவீன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில் நவீனிடம் பசுபதிபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஜெயலட்சுமியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி 40 பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் உள்ளுறை மருத்துவ அலுவலர்(ஆர்எம்ஓ) முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT