Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM
காரைக்கால்: காரைக்காலில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து புதுச்சேரி உணவு பாதுக்காப்புத் துறை அலுவலர் மு.ரவிச்சந்திரன் நேற்று கூறியது: காரைக்கால் நகரம், நிரவி, திருமலைராயன்பட்டினம், திருநள்ளாறு, சுரக்குடி, விழிதியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 8 கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கப்படும். சுகாதாரமான முறையில் செயல்படாத உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மளிகைக் கடைகளில் வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT