Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள தீயம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் செங்குன்றம் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த சிறிய சரக்கு வாகனத்தை போலீஸார் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், 2 பேர் சென்றம்பாக்கம் பகுதியிலிருந்து, எருமை மாடு ஒன்றைதிருடி சோழவரம் அருகே விச்சூர் பகுதிக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த செங்குன்றம் போலீஸார், வீச்சூர் பகுதியை சேர்ந்த மாடு வியாபாரியான பிரபாகரன்(29), சிறியசரக்கு வாகன உரிமையாளரான யூசுப்(56) ஆகிய இருவரை கைது செய்ததோடு, மாட்டுடன் கூடிய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT