Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM

இடப்பிரச்சினையால் இருதரப்பினர் மோதல் : ஸ்ரீமுஷ்ணம் அருகே 3 பேர் கைது

ஸ்ரீமுஷ்ணம் அருகே கோவிந்தநல்லூர் பகுதியில் இடபிரச்சினை முன்விரோதத்தால் இருதாப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் 10 பேர் மீது வழக்குப்பதிவி செய்து, 3 பேரை கைது செய்துள்ளனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே சோழத்தரத்தை அடுத்துள்ள கோவிந்தநல்லூர் பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி குடும்பத்தினருக்கும், ராபர்ட்கென்னடி குடும்பத்தினருக்கும் இடபிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 12 ம் தேதி மாலை அப்பகுதியில் நடைபெற்ற திருமண விழாவிற்கு செல்லும் போது ஏற்பட்ட பிரச்சனையில் இருதரப்பினரும் கம்பி, கட்டை, கழியால் தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து சோழத்தரம் காவல்நிலையத்தில் ராபர்ட் கொன்னடி தரப்பைச சேர்ந்த அருண் என்கிற லெனின் (30) அளித்த புகாரில் அபிநாஸ்(21), விஷால் விக்ரம்(22), ரூபன் சுடர்ஒளி(21), விஜயகபிலன், தீபக்அஸ்வின்(19), அலோசின் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லெனின் புனேவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பணி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போல அபிநாஸ்(21) அளித்த புகாரில் அருண் என்கிற லெனின், சுகிர்தராஜ்(63) ,ராபர்ட் கென்னடி(45) ,லிகிஸ்நிக்சன்(21) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று விஜயகபிலன், சுகிர்தராஜ், விஷால் விக்ரம் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x