Published : 16 Sep 2021 03:14 AM
Last Updated : 16 Sep 2021 03:14 AM

அண்ணா பிறந்தநாள்: சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவிப்பு :

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமையில் திமுகவினர் தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.

பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டதிமுக சார்பில் தமிழக மீன்வளம்,மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏஎம்.சி.சண்முகையா, மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் மாடசாமி, ஜெயக்கொடி, மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் புளோரன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், அமைப்புச் சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் எம்.பி., நட்டர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுபோல் அதிமுக மாநிலஅமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் தனியாக வந்து மாலை அணிவித்தனர்.

மதிமுக சார்பில் மாவட்ட அவைத்தலைவர் தர்மம் தலைமையிலும், அமமுக சார்பில் மாநிலஅமைப்புச் செயலாளர்கள் ஹென்றிதாமஸ், சுந்தரராஜ் ஆகியோர் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி

அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, அமமுக சார்பில் தச்சநல்லூர்பகுதி செயலாளர் பேச்சிமுத்துபாண்டியன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் நிஜாம், தேமுதிக மாவட்ட அவைத் தலைவர் மாடசாமி மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்தனர்.

கோவில்பட்டி

புதூர், விளாத்திகுளம், குளத்தூர், எட்டயபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாவில், அண்ணா உருவப்படத்துக்கு ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராதா கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, செல்வராஜ், புதூர் நகர செயலாளர் மருது பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி நகர தி.மு.க. சார்பில் அண்ணா பேருந்து நிலையம்அருகே அண்ணா உருவப்படத்துக்கு நகரச் செயலாளர் கருணாநிதி, மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் எட்டயபுரம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே தி.மு.க. பொறியாளரணி துணை அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

இதுபோல் கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள அண்ணா சிலைக்குஅ.தி.மு.க. நகரச் செயலாளர் விஜயபாண்டியன், மார்க்கெட் சாலை சந்திப்பில், ம.தி.மு.க. நகரச் செயலாளர் பால்ராஜ், வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், எட்டயபுரம் சாலை தொழிற்பேட்டை அருகே ம.தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x