Published : 09 Sep 2021 03:15 AM
Last Updated : 09 Sep 2021 03:15 AM

கார் பள்ளத்தில் உருண்டு விபத்து : சிறுமி உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு :

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காரில் சிவகாசி நோக்கி கோவில்பட்டி-சாத்தூர் நான்குவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர். காரை சண்முகவேல் ஓட்டி வந்துள்ளார். நான்குவழிச் சாலையில் புல்வாய்பட்டி சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி பள்ளத்தில் உருண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆவுடையம்மாள், சண்முகபிரியா, தனலட்சுமி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த முருகன், சண்முகவேல் ஆகிய இருவரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x