Published : 04 Sep 2021 03:17 AM
Last Updated : 04 Sep 2021 03:17 AM

குட்கா கடத்திய 5 பேர் கைது :

ராணிப்பேட்டை

சோளிங்கர் அருகே குட்கா கடத்திய 5 பேர் கும்பலை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் காவல்நிலைய ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் காவலர்கள் சோளிங்கர்-பாணாவரம் கூட்டுச் சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ் வழியாக வேகமாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த சுரேஷ்குமார் (25) நிமோரா (28) ஆகியோர் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டு கள் இருந்தன. மேலும், போதைப் பொருட்கள் வாங்க எடுத்து வந்த ரூ.7 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் நடத்திய தீவிர விசாரணையில். போதைப் பொருட்கள் வாங்கி விற்பனை செய்பவர் கோவிந்தராம் என்பது தெரியவந்தது. அவருக்கு பாணாவரம் கூட்டுச்சாலை அருகே கிடங்கு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த கிடங்கில் காவல் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுக்கி வைத்திருந்த 6 மூட்டைகளில் குட்கா மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்த கல்ராம் (32), லட்சுமணன் ஆகிய இருவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 7 மூட்டைகள்‌ மற்றும் இரண்டு இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவலர்கள் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x