Published : 30 Aug 2021 03:14 AM
Last Updated : 30 Aug 2021 03:14 AM

ஆர்ஐ பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு :

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் அறிவுறுத்தலின்படி, 35 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மானுவேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரியும் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து வருவாய் ஆய்வாளர்கள் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த் துறை சங்கத்தினர் கூறும்போது, "வருவாய்ஆய்வாளர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 35 வருவாய் ஆய்வாளர்களுக்கு இன்னும் 2 ஆண்டுகள் முடியவில்லை. சில ஆய்வாளர்கள் 2 மாதங்கள் மட்டுமே பணிபுரிந்துள்ளனர். இதற்கு விரைவில் தீர்வு காணவில்லை எனில், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x