Published : 28 Aug 2021 03:14 AM
Last Updated : 28 Aug 2021 03:14 AM

சின்னாளபட்டியில் 257 கிலோ குட்கா பறிமுதல் வெளிமாநிலங்களை சேர்ந்த 3 பேர் கைது :

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையிலான போலீஸார் தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. காரில் வந்த மூவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள், ராஜஸ்தானை சேர்ந்த ரேவ்ராம் (25), கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (25), தேவ்ராஜ்(21) எனத் தெரிய வந்தது. மேலும், பெங்களூருவில் இருந்து மதுரைக்கு குட்காவை கொண்டு செல்வதும் தெரிய வந்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x