Published : 24 Aug 2021 03:14 AM
Last Updated : 24 Aug 2021 03:14 AM

திருப்போரூர் ஒன்றியத்தில்கரோனா தடுப்பூசி முகாம்கள் :

கேளம்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் படூர் ஊராட்சியில் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை, கேளம்பாக்கம் சுகாதாரத் துறை சார்பில் நேற்று சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில், அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்காக மீண்டும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

முகாமில், கேளம்பாக்கம் சுகாதார ஆய்வாளர் குணசேகரன், அறக்கட்டளைத் தலைவர் சுதாகர், நிர்வாகிகள் குமார், சரவணன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம், முள்ளிப்பாக்கம், பெரியவிப்பேடு, தண்டரை, கொட்டமேடு, மடையத்தூர், புதுப்பாக்கம் ஊராட்சிகளிலும், சட்டப்பேரவை உறுப்பினர் பாலாஜி ஏற்பாட்டில், சுகாதாரத் துறையினர் சிறப்பு முகாம்கள் நடத்தி, கிராம மக்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x