Published : 11 Jul 2021 03:15 AM
Last Updated : 11 Jul 2021 03:15 AM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் - 6 வட்டாட்சியர்கள், 4 பிடிஓ-க்கள் இடமாற்றம் : ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்கள், 4 பிடிஓ-க்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 6 வட்டாட்சி யர்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார். இதில், வாலாஜா சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஆனந்தன், வாலாஜா வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் கலவை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி, வாலாஜா சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், கலவை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் ஆற்காடு வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், ராணிப்பேட்டைவருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், அரக்கோணம் கோட்டாட்சி யரின் நேர்முக உதவியாளராகவும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த நேர்முக உதவியாளர் குமரவேல், ராணிப்பேட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

அதேபோல், நான்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) வேதமுத்து, அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) ஆகவும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த பாஸ்கரன், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஆகவும் மாற்றப்பட்டுள் ளனர். நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) அன்பரசன், சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆகவும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த சாந்தி, ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஆகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x