Published : 22 Jun 2021 03:13 AM
Last Updated : 22 Jun 2021 03:13 AM

எஸ்எம்ஏ பள்ளியில் தந்தையர் தின விழா :

தென்காசி

பாவூர்சத்திரம் அருகே அடை க்கலப்பட்டணம் எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் பள்ளியில் தந்தையர் தின விழா இணையவழியில் கொண்டாடப் பட்டது.

‘என்னுடைய தந்தை என்னுடைய ஹீரோ’ என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான 48 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் பரிசளித்தார். அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் கலைச் செல்வி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x