Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிகாரிகள் ஆய்வு :

திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள்.

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சிறப்பு நிலை பேரூராட்சி, சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், பேரூராட்சிப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் 13-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தொற்று பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில், பேரூராட்சி செயல் அலுவலர் சதிஷ்குமார் தலைமையில், சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திருப்போரூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மாவட்ட சுகாதாரக் குழு அலுவலர் சாந்தி தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்திய அலுவலர்கள், குடியிருப்போர் அனைவரும் மருத்துவ முகாமில் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் தெரிவித்தனர். ஆய்வின்போது, வட்டார மருத்துவ அலுவலர் சுப்பிரமணி, பேரூராட்சி தூய்மைப் பணி மேற்பார்வையாளர் ரவிக்குமார் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x