Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

வீட்டிலிருந்த பள்ளி மாணவி பலாத்காரம் - போக்ஸோ சட்டத்தில் 3 பேர் கைது :

திண்டுக்கல் அருகே பள்ளி மாண விக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து பலாத்காரம் செய்த தாக 3 பேரை போக்ஸோ சட்டத் தின் கீழ் போலீஸார் கைது செய் தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குருநாதன்(70), பெருமாள்(65), தங்கவேல்(37). அதே பகுதியில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர், விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார். கூலி வேலை செய்யும் அவரது பெற்றோர் தினமும் பணிக்குச் சென்று வந் துள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த பெற்றோர், அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, குருநாதன், பெருமாள், தங்கவேல் ஆகியோர் கடந்த 5 மாதங்களாக தனக்கு பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக சிறுமி தெரிவித்தார். வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்த குருநாதன், பெருமாள், தங்கவேல் ஆகி யோரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x