Published : 31 Mar 2021 03:16 AM
Last Updated : 31 Mar 2021 03:16 AM

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி :

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில்சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று தொடங்கின.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 113 பேர் போட்டியிடுகின்றனர். 27 லட்சத்து 16 ஆயிரத்து 385 வாக்காளர்கள் உள்ளனர். 3,833 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் புகைப்படம், பெயர், சின்னம் ஆகியவற்றை பொருத்தும் பணிகள் அந்தந்த தொகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக பிரெய்லி முறையில் சின்னம், வேட்பாளரின் பெயர், எண்கள் வரிசையாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை தடவிப் பார்த்து அவர்கள் வாக்களிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x