Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM

புதுப்பட்டினம் அருகே 15 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு :

இந்நிலையில், முன்பக்க கதவு வழியாக வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஹனிபா தூங்கிய அறையின் கதவை பூட்டிவிட்டு, பீரோவில் இருந்த 15 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க்கை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

காலையில் நண்பர் மூலம் வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்த ஹனிபா, பீரோவில் இருந்த நகை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகாரின்பேரில் கல்பாக்கம் போலீஸார் தடயங்களை சேகரித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x